வலைப்பதிவில் குறைந்த பட்சம் மூன்று பதிவையாவது போட்டா தான் நம்ம சைட்டை தமிழ்மனத்தில் சேர்ப்பாங்கன்னு எங்கோ படித்த் நியாபகம்.
அதான் உடனே வந்துட்டேன்.
இந்ந பதிப்பில் நான் நியாபகப்படுத்த வேண்டியது எனது நண்பர் சாகரனை பற்றி. bloggerல் ரொம்ப காலமா உலா வரும் பலபேருக்கு சாகரனை நல்லா தெரியும். எனக்கு blog பத்தியும், unicode பத்தியும், தமிழில் டைப் செய்றது பத்தியும் எனக்கு கத்துக் கொடுத்தது சாகரன் தான். அவரின் படைப்பான தேன்கூடு இணையம் ரெடியானதும் என்னை கூப்பிட்டு காண்பித்தார். சைட் முழுவதும் காட்டி சந்தோஷப்பட்டார். அப்போது கூட அவர் ஒரு technical ஆசாமியாக தான் எனக்கு தெரிந்தார். ஆனால் அவர் மறைவுக்கு பின்னர் தான், அவர் bloggerல் எவ்வளவு பிரபலம் என்று தெரிந்தது. ஆயிரக்கணக்கான் இணைய தளத்தில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டன. அவர் கடைசியாக நடித்த மேடை நாடகம் இன்னும் என் கண்ணில் நிர்க்கிறது.
ரொம்ப நாலைக்கு அப்புறம், வலைப்பூவுக்கு வந்ததும், அவர் நியாபகம் வந்தது, அதான்......
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment